செய்திகள்

வளைகுடாவில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கம்மை

திருவனந்தபுரம், டிச. 19– வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவிற்கு வந்த 2 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு வந்த 2 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 2 பேரும் பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் உத்தரவு இதனைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் கூடுதலாக தனி வார்டுகளை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு, […]

Loading

செய்திகள்

கேன்சருக்கு ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசி: 2025 முதல் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு

மாஸ்கோ, டிச. 19– ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளதுடன், அதனை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். மருத்துவத்தில் பல தொழில்நுட்பங்கள் வந்தபோதிலும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது சிக்கலாகவே இருந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புற்றுநோய் தடுப்பூசிகள் […]

Loading

செய்திகள்

மகா கும்பமேளாவுக்கு இலவச பயணம்: தவறான செய்திக்கு இந்திய ரயில்வே விளக்கம்

சென்னை, டிச. 19– மகா கும்பமேளாவின் போது பயணிகள் ரயிலில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சில ஊடகங்கள் செய்திகளை பரப்பி வருவது இந்திய ரயில்வேயின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தச் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதுடன், அது மக்களை தவறாக வழிநடத்துபவை என்பதால் இந்திய ரயில்வே திட்டவட்டமாக இதனை மறுக்கிறது. இது தொடர்பாக இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்லுபடியாகக் கூடிய உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது இந்திய ரயில்வேயின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் […]

Loading

செய்திகள்

ஓய்வு அறிவித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி; கிரிக்கெட்டில் எனது பயணம் தொடரும்: அஸ்வின் பேட்டி

சென்னை, டிச. 19– ஓய்வு அறிவித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான், கிரிக்கெட்டில் எனது பயணம் தொடரும் என்று சென்னை விமான நிலையத்தில் அஸ்வின் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அங்கம் வகித்தார். 3வது டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைவு

சென்னை, டிச. 19– 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு […]

Loading

செய்திகள்

இளைஞர்களுக்கான மாரடைப்பு: மன அழுத்தமே அதிக காரணம்

இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தகவல் சென்னை, டிச. 19– 20 வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட மன அழுத்தமே காரணம் என இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனையின் இருதய நிபுணர்கள் குழு, புதிய தொழில்நுட்பத்தால் இருதய சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவித்ததுடன் முன்பெல்லாம் 60 வயது மதிக்கத்தக்க நபர்களுக்கு வரக்கூடிய மாரடைப்பு என்பது தற்போது 20 வயதிலேயே ஏற்படுகிறது எனக் கூறினர். மன அழுத்தமே காரணம் புகைப்பிடிப்பவர்களுக்கு தான் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

புற்றுநோய் தடுப்பூசி: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ, டிசம்பர் 19: ரஷ்யா, புற்றுநோய்க்கான mRNA அடிப்படையிலான புதிய தடுப்பூசியை உருவாக்கி விட்டதாகவும் அதனை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த முக்கிய முன்னேற்றம், ரஷ்ய பிரஜைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதாக ஊடக செய்திகள் உறுதிபடுத்துகின்றன. இந்த தகவலை ரஷ்ய சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொதுநிர்வாக இயக்குநர் அந்த்ரே கப்ரின் அறிவித்தார். பல ஆராய்ச்சி மையங்கள் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசி, முன்-நடைமுறைகள் மூலம் கட்டிகளை கட்டுப்படுத்தி, பரவலைத் தடுக்கக்கூடிய திறனை நிரூபித்துள்ளது. […]

Loading

செய்திகள்

கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு: முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, டிச. 19– கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவில், ‘‘தங்களது வியத்தகு கிரிக்கெட் பயணம் இரசிகர்கள் எண்ணி மகிழ எண்ணற்ற பல நினைவுகளை வழங்கியுள்ளது; பல லட்சம் பேரை எல்லைகள் கடந்து பெரிதாகக் கனவு காண ஊக்குவித்துள்ளது. தங்களது வாழ்க்கையின் அடுத்தகட்டத்திலும் ஒவ்வொரு முயற்சியிலும் ஒப்பற்ற திறமையை வெளிப்படுத்திப் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்’’ என்று […]

Loading

செய்திகள்

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் : ஸ்டாலின் புகழஞ்சலி

இன்று (வியாழன்) பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘கழகத்திற்கும் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர் அன்பழகன்! “தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்” என இனமான வகுப்பெடுத்து – கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்’’. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

செய்திகள்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்

புதுடெல்லி, டிச. 18– விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அண்மைக் காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மிரட்டலானது உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் விடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கடுமையாக அவதிப்படுவதோடு, அவர்களின் பயணமும் கால தாமதாகிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி […]

Loading