செய்திகள்

12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு துவங்கியது

சென்னை, பிப்.12–

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று துவங்கியது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கியது. 17ம் தேதி வரை நடைபெறகிறது. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *