செய்திகள்

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை

சென்னை, ஏப். 16–

தென்சென்னையில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்

தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன்.

ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

தமிழிசை: பா.ஜ.க.வுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது?

ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பா.ஜ.க. தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும்.

தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி.

ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *