செய்திகள்

புரோ கபடி லீக்: பெங்கால், உ.பி. அணிகள் மோதிய ஆட்டம் டிரா

புனே, டிச. 19–

பெங்கால், உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தன.

10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ்,தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இதில் நேற்றிரவு நடந்த முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் ,- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதல் கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 37-–37 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 30-–23 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *