செய்திகள்

பஞ்சாபின் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும்: முதலமைச்சர் பகவந்த் மான் உறுதி

சண்டிகர், ஜன. 18–

பஞ்சாபில் உள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய அகில இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பேசியதாவது:–

“மக்களவை தேர்தலில், பஞ்சாபில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும். 13 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் பணியில் சிறப்பாக ஈடுபட வேண்டும் என்றார்.

அகில இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதில் சில கட்சிகள் பிடிவாதமாக உள்ளன. இந்நிலையில், பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான பகவந்த் மான் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *