புதுடெல்லி, மார்ச் 30–-
நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19–-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், அண்ணா தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கக்கூடாது என தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தேர்தலை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் சின்னங்களை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்ணா தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமிஷனின் செயலாளர் ஜெயதேவ் லாஹ்ரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.