சென்னை, ஜன. 31–
தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரெயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில் பிப்ரவரி 4-ந்தேதி 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இதே போல தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை காலை 8.05 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25 ஏப்ரல் 1-ந் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி- – மேட்டுப்பாளையம் இடையே ஓடும் சிறப்பு ரெயிலும் பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்- – திருநெல்வேலி சிறப்பு ரெயில் பிப்ரவரி 5, 12, 19, 26 மற்றும் மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.