சென்னை. அக்.14-–
சென்னை ஐகோர்ட்டுக்கு 2 புதிய கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களாக உள்ள என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியமும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியமும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, இருவரையும் சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, இருவரையும் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, புதிய நீதிபதிகள் வருகிற 16-ந்தேதி திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளனர்.
இவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். புதிய நீதிபதிகள் இருவரும் பதவி ஏற்பதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 65 ஆக உயர உள்ளது. காலியிடம் 10 ஆக குறைய உள்ளது.