செய்திகள்

உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு

தரமற்ற 46 மருந்துகள் கண்டுபிடிப்பு

டெல்லி, பிப். 22–

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 46 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை இமாசல் பிரதேசம், உத்தரக்கண்ட், ஜம்மு உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து – மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தரமற்ற 46 மருந்துகள்

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 932 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, உயர் ரத்த அழுத்தம், வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 46 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டன.

இதையடுத்து அதன் விவரங்களை ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *