செய்திகள்

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி

மாபுடோ, ஏப். 8–

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் காலரா பாதிப்பிலிருந்து தப்பி பிழைப்பதற்காக, கடல் வழியாக பயணித்த 90 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர். 26 பேரை காணவில்லை.

இது குறித்த விவரம் வருமாறு:–

தென்னாப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த அக்டோபரில் இருந்தே காலரா நோய் பரவி வருகிறது. காலாவிற்கு கடந்த சில நாட்களாக, சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலரா நோயால் 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில்,காலரா நோய்க்கு பயந்து சுமார் 130 பேர்களுடன் புறப்பட்ட சிறு படகு, நம்புலா மாகாணத்திலிருந்து ஒரு தீவை அடைய முயன்றபோது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர். 26 பேரை காணவில்லை. சிறு படகில் அளவுக்கு அதிகமானோர் பயணித்தது விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *