செய்திகள்

ரூ.53 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை: மீண்டும் புதிய உச்சம் தொட்டது

சென்னை, மார்ச் 8–

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு பவுன் ரூ.53,280க்கு விற்பனையாகிறது. மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டிருக்கிறது.

சர்வதேச பொருளாதார நில வரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு பவுன் ரூ.53,280க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.88க்கு விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரன் ரூ.1280 உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.48 ஆயிரம், கடந்த மார்ச் 9ம் தேதி ரூ.49 ஆயிரம், மார்ச் 28ம் தேதி ரூ.50 ஆயிரம், அடுத்த நாளான 29ம் தேதி ரூ.51 ஆயிரம், ஏப்ரல் 4ம் தேதி ரூ.52 ஆயிரம் என தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சங்களை தொட்டது. இவ்வாறாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *