திண்டுக்கல், பிப். 6–
அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரான சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற காவலில் அங்கிட் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அங்கித் திவாரி ஜாமின் மனு இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அங்கித் திவாரி ஜாமின் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கிட் திவாரிக்கு 4வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 7–-ந் தேதி வரை சிறையில் அடைக்கப்படுகிறார்.