செய்திகள்

7 மாதத்தில் ரெயில்களில் பயணித்தோர் 390 கோடி

372 கோடி பயணங்கள் ஏ.சி. அல்லாத பயணம்; 18 கோடி மட்டுமே ஏசி பயணம்

டெல்லி, நவ. 16–

இந்திய ரெயில்களில் கடந்த மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டில் பெரும்பான்மையாக 95.3 சதவீத பயணிகள் குளிா்சாதன (ஏசி) வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், 4.7 சதவீதம் பேர் மட்டுமே குளிரூட்டப்பட்ட (ஏசி) பெட்டிகளிலும் பயணித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:–

நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் வரையிலான 7 மாதத்தில் மொத்தம் 390.2 கோடி பயணிகள் ரெயில்களில் பயணித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையைவிட 41.1 கோடி (11.7 சதவீதம்) கூடுதலாகும். இந்த 41.1 கோடி பயணிகளில் 38 கோடி பயணங்கள் பொது மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏசி வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், மற்ற 3 கோடி பயணம் ஏசி பெட்டிகளிலும் இருந்துள்ளது.

மொத்த பயணிகள் 390 கோடி

மொத்தம் 390.2 கோடி பயணங்களில் 95.3 சதவீதமான 372 கோடி பயணங்கள் ஏசி வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், மற்ற 4.7 சதவீதமான 18.2 கோடி பயணங்கள் ஏசி பெட்டிகளிலும் பயணித்துள்ளனர்.

கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது, தற்போது கூடுதலாக 562 ரயில் சேவைகளை இந்திய ரெயில்வே தொடங்கியுள்ளது. கொரோனாவுக்கு முன்பு 10,186 ரெயில் சேவைகள் செயல்பாட்டில் இருந்த நிலையில், தற்போது 10,748 ரெயில் சேவைகள் செயல்படுத்தப்படுகின்றன.

மெயில் மற்றும் விரைவு ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 1,768-லிருந்து 2,122-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. வளரும் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ரெயில் சேவைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் இந்தியன் ரெயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *