சென்னை, ஜன.24-–
ஆவணங்களின் பதிவு மூலம் ஒரே நாளில் பதிவுத்துறை ரூ.168 கோடி ஈட்டியுள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-– தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத் துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், 31.1.2024 வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது.
இதனை உறுதி செய்யும் வகையில் 22.1.24 (நேற்று முன்தினம்) அன்று மட்டும் 21 ஆயிரத்து 4 ஆவணங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. புதிய கூட்டு மதிப்பின் அடிப்படையின் கீழ் அன்று சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூ.12 கோடி வருவாயும் இதில் அடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.