நல்வாழ்வுச் சிந்தனைகள்
வயிற்றில் ஏற்படும் உப்புசம், கெட்ட காற்று, செரிமானக்கோளாறுகள் போன்றவற்றைச் சரிசெய்யும். எனவே தான் நம் முன்னோர்கள், சமையலில் பெருங்காயம் சேர்த்து வந்தனர்.
வயிற்று வலி, மார்புவலி போன்றவை ஏற்படும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரில், கால் தேக்கரண்டி பெருங்காயத்தைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிக் குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மாதவிடாய் வலிக்கு, பெருங்காயத் தூள் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சிறு உருண்டைகளாக சாப்பிட, வலி குறையும்.
மோரில் எப்போதுமே சிறிது பெருங்காயத் தூள் கலந்து சாப்பிடுவது நல்லது.
பருப்பு வகைகளைச் சமைக்கும் போது, பெருங்காயம் சேர்த்துச் சமைத்தால் பருப்பு செரிக்கும். வாயு , வாதப் பிரச்சனைகள் குணமாகும்.