செய்திகள்

மஞ்சுமல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

திருவனந்தபுரம், ஜூன் 24–

மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை நடத்தி வருகிறது.

மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 அன்று வெளியிடப்பட்டு, உலகளவில் ரூ. 241 கோடி வசூலித்து, மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றியதாக,சிராஜ் என்பவர், எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக அவர் ரூ. 7 கோடி முதலீடு செய்ததாகவும், தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதுவரை லாபத்தில் ஒரு ரூபாய் கூட அளிக்கவில்லை என்றும், முதலீடு செய்த பணத்தை திருப்பி தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி, தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியை கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்ற தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கிடைத்த பணத்தை கருப்பு பணமாக மறைத்து வைத்துள்ளார்களா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#manjumalboys #kodaikanal #Illayaraja #Tamilnews #Makkalkural

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *