செய்திகள் நாடும் நடப்பும்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் !

பாகிஸ்தான் கோரிக்கைக்கு துருக்கி ஆதரவு அன்காரா, மே 9– பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை கேட்கும், பாகிஸ்தான் கோரிக்கைக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இது இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச அளவிலான நடுநிலை விசாரணை தேவை என […]

Loading

செய்திகள்

12ஆம் வகுப்பு தேர்வில் சாய்ராம் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

மாநிலத்தில் 2வது இடம் சென்னை, மே 9– சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தொடர் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி தொடர்ச்சியாக 31 ஆண்டுகளாக அனைத்து மாணவர்களும் முதல் வகுப்புக்கு மேல் உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் தற்போது வெளிவந்துள்ள 12ஆம் வகுப்பு தேர்விலும் தேர்வு எழுதிய 175 மாணவ, மாணவிகள் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

புரிந்ததா? – மு.வெ.சம்பத்

அமுதன் அகிலாவிற்கு ஒரே ஒரு பையன். ஆனந்தன் என்று பெயர். அவனுக்கு கல்யாணம் செய்ய அமுதன் மற்றும் அகிலா பெண் பார்க்கத் தொடங்கினார்கள். அமுதன் தன் நண்பர்கள் மூலமும் தனது சகோதரன் அமரேசன் மூலமும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அமரேசன் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்தார். அன்று காலையில் வந்த அமரேசன் அமுதனிடம் பக்கத்து ஊரில் தனது நண்பனுக்குத் தெரிந்தவருக்கு திருமண வயதில் பெண் இருக்கின்றாளாம். நண்பன் அவர்களிடம் பேசி விட்டு சொல்கிறேன் என்று சொல்லியுள்ளார். […]

Loading

செய்திகள்

டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியன் காலமானார்

சென்னை, மே 8– புகழ்பெற்ற எலும்பியல் நிபுணரும், அண்ணா நகரில் உள்ள சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர். எஸ். சௌந்தரபாண்டியன் நேற்று (7ந் தேதி) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94. 1931 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தவர் டாக்டர். சௌந்தரபாண்டியன். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தனது எம்பிபிஎஸ் பட்டத்தையும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) எம்எஸ் பொது அறுவைசிகிச்சை மற்றும் எம்எஸ் எலும்பியல் பட்டங்களையும் பெற்றார். […]

Loading

செய்திகள்

தோல்வி பயத்தில் தற்கொலை செய்த தஞ்சை மாணவி பிளஸ்–2 வில் தேர்ச்சி

தஞ்சாவூர், மே 8– தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் இன்று வெளியான தேர்வு முடிவில் அவர் 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளார். புண்ணிய மூர்த்தி என்பவரது மகள் ஆர்த்திகா. பாபநாசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ஆர்த்திகா, பொதுத்தேர்வு எழுதி இருந்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருந்தநிலையில், தேர்வில் தோல்வியடைந்து […]

Loading

செய்திகள்

அடுத்த போப்பை தேர்வுக்கு கார்டினல்கள் மாநாடு

தலையங்கம் போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் சமீபத்தில் காலமானதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அவரது உடல் வாடிகனில் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, உலகெங்கும் இருந்து கார்டினல்கள் விரைவில் வாடிகனில் கூடி, அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்கும் ‘கான்கிளேவ்’ அதாவது மதகுருமார்களின் மாநாடு எனப்படும் மரபு துவங்க இருக்கிறது.. கத்தோலிக்க திருச்சபையின் உயர்மட்ட மத தலைவர் என போற்றப்படும் போப் ஆண்டவரை தேர்வு செய்யும் இந்த ரகசிய செயல்முறை, பண்டைய ரோமானிய முறைப்படி தொன்றுதொட்டு பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் […]

Loading

செய்திகள்

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி சென்னை, மே 8– பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில் மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி கடந்த மாதம் 17ம் தேதி […]

Loading

சினிமா செய்திகள்

தமிழ் வில்லன் நடிகர் சம்பத்ராமுக்கு மலையாள சினிமாவில் விருது

சென்னை, மே 8– தமிழில் வளர்ந்து வரும் இளம் வில்லன் நடிகர் சம்பத்ராமுக்கு (வயது 54), மலையாளத்தில் சிறந்த வில்லன் நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரம் என்றாலும், முகமலர்ச்சியுடன் ஏற்று, சிரத்தையாக நடித்து, அனைவரின் பாராட்டுக்களைப் பெற்று வருபவர் இவர். தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து கொண்டிருப்பவர், பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்று வருபவர். தற்போது தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் மட்டுமல்ல […]

Loading

செய்திகள்

என்ஜினீயரிங், கலை– அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு

அமைச்சர் கோவி.செழியன் துவக்கினார் சென்னை, மே.8- என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2025-–26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தொடங்கி உள்ளது.இந்த ஆன்லைன் விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார். www.tneaonline.org என்ற இணையதளத்தில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

புதுடெல்லி, மே7 இந்தியா இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoJK) பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு திட்டமிட்ட மற்றும் துல்லியமான வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ஷ்-இ-மொஹம்மதின் பஹாவல்பூர் தலைமையகம் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் முரித்கே முகாம் உள்ளிட்ட முக்கிய இலக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. “இந்த நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடனும், கணக்கிட்ட […]

Loading