செய்திகள்

பெங்களுருவில் முதன்முறையாக இன்று முதல் கம்பாலா போட்டிகள்

200 க்கும் மேற்பட்ட ஜோடி எருமைகள் பங்கேற்பு

பெங்களூரு, நவ. 25–

பெங்களூருவில் முதன்முறையாக இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் எருமைகள் பங்கேற்கும் கம்பாலா போட்டிகளை காண, 2 லட்சத்துக்கும் மேலானோர் குவிந்துள்ளனர்.

கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் ஒன்று கம்பாலா. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் போல, கர்நாடகாவில் கம்பாலா என்றால் மக்கள் குதூகலம் ஆகி விடுவார்கள்.

சேறும் சகதியும் நிறைந்த வயலில் இரண்டு எருமைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறுக்கையில் குச்சியை வைத்துக்கொண்டு விரட்டிக் கொண்டே ஓட வேண்டும். நிலத்திலிருந்து தண்ணீர் பீரிட்டு கிளம்ப எருமைகளின் கால் சத்தம் பேரொளியாக வெடிக்கும். இளைஞர்களின் முறுக்கு போன்று உடல் சீறிப்பாய பூமியை தெறிக்கும்.

200 ஜோடி எருமைகள்

அப்படியே பார்க்கும் பொழுது மெய்சிலிர்க்கும் உணர்வை ஏற்படுத்தும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இந்த கம்பால போட்டிகள் கடலோர கர்நாடகாவில் தான் பெரும்பாலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதன்முறையாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியானது இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. பெங்களூரில் உள்ள பேலஸ் மைதானத்தில் 200 ஜோடி எருமைகள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளை காண 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருகை தருவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த கம்பாலா போட்டிகள் நடைபெறும் இடத்தில் உள்ள முதன்மை மேடைக்கு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கம்பாலா போட்டிகளை காண, பாலிவுட் பிரபலங்கள் ஐஸ்வர்யா ராய் பச்சன், அனுஷ்கா ஷெட்டி, சில்பா ஷெட்டி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கே.எல்.ராகுல், சுனில் ஷெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் இதனை காண வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *