சென்னை, மார்ச் 21–
பா.ஜ.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக இன்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி வேட்பாளர்கள் 4 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். எனவே 24 வேட்பாளர்கள் பட்டியலுடன் இன்று நான் டெல்லி செல்கிறேன் என்று அண்ணாமலை நிருபர்களிடம் தெரிவித்தார்.
39 தொகுதிகளுக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் சொல்வது சரியாக இருக்காது. அவரே உங்களிடம் தெரிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள், தா.மா.க.வுக்கு 3 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 2 தொகுதிகள் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுக்கு ஒரு தொகுதி, ஐ.ஜே.கே. கட்சி பாரிவேந்தர், இந்திய மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை தெரிவித்தார்.