செய்திகள்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் நீட்டிப்பு: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை, ஏப்.4-

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை பயணிகளின் தேவைக்கேற்ப தெற்கு ரெயில்வே நீட்டித்து வருகிறது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயிலும் (வண்டி எண்.06067), மறுமாா்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரெயிலும் (06068) இன்று (வியாழக்கிழமை) முதல் 25ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் இயங்கும்.

இதேபோல, நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06030) வரும் 7ந்தேதி முதல் மே மாதம் 26ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கும். மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06029) வரும் 8ந்தேதி முதல் மே மாதம் 27ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் இயங்கும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *