செய்திகள்

சாலைகளின் மோசமான வடிவமைப்பே விபத்துகளுக்கு காரணம் : நிதின் கட்கரி

ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள்

டெல்லி, ஜன. 17–

ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் நடந்து 19 பேர் உயிரிழக்கின்றனர் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துக்களுக்கு சாலை பொறியியலில் உள்ள குறைபாடுகளே காரணம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். சாலை பாதுகாப்பு குறித்து, டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த மாநாட்டில் கலந்து கொண்ட ஒன்றிய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:–

தவறான செயல்முறை

சாலை விபத்துகள் மற்றும் இறப்புகள் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் நடந்து 19 பேர் உயிரிழக்கின்றனர். சாலைப் பாதுகாப்புக்குத்தான் அரசின் முதன்மை முன்னுரிமை. 2030ஆம் ஆண்டுக்குள் விபத்துக்களை 50 சதவீதம் குறைக்க அரசு உறுதிபூண்டுள்ளது.

ஆனால் இதற்கு அனைவரும் அந்தந்த மட்டத்தில் இருந்து ஒத்துழைக்க வேண்டும். இந்த வேலையை அரசு மட்டும் செய்ய முடியாது. தனது அனைத்து முயற்சிகளையும் மீறி, தவறான செயல்முறைகள் தொடர்கிறது. நம் நாட்டில் சாலைப் பாதுகாப்புச் சூழல் மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்றும் நிதின் கட்கரி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *