“காபூல், ஏப்.15–
ஆப்கானிஸ்தானில் கன மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களில் 33 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சைக் கூறுகையில்,
தலைநகர் காபூல் மற்றும் பல மாகாணங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த வெள்ளத்தால் சுமார் 800 ஹெக்டேர் விவசாய நிலங்களும், 85 கிலோமீட்டர் சாலைகளும் சேதமடைந்துள்ளன. மேற்கு பரா, ஹெராத், தெற்கு ஜாபுல் மற்றும் காந்தகார் ஆகிய மாகாணங்கள் அதிக சேதங்களை சந்தித்துள்ளன.
மேலும் ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.