முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்
சென்னை, ஏப்.28-
வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-–
பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர். அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்கு தூணாக விளங்கிய மக்கள் தொண்டர். காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி.
தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் – நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும், பணியையும் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.