தலையங்கம் இந்தியாவின் கடல்சார் வர்த்தக வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் உருவெடுத்துள்ளது. ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தத் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இம்மாதத் துவக்கத்தில் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது கேரள மாநிலத்திற்கும் இந்தியாவுக்கும் பொருளாதார வரலாற்றில் புதிய அடையாளம் ஆகும். இதுவரை இந்தியா தனது சரக்குப் போக்குவரத்துக்காக இலங்கையின் கொழும்பு, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு துறைமுகங்களை சார்ந்திருந்தது. இந்திய துறைமுகங்களின் ஆழம் குறைவாக இருப்பதால், 20,000 கன்டெய்னர்கள் கொண்ட பெரிய […]