செய்திகள்

வடபழனி, கே.கே.நகர், போரூர் செல்ல கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து இடப்பக்கம் திரும்பும் பஸ்களுக்கான நிறுத்தம், நிழல்குடை, வேகத் தடை

பொதுமக்கள் எதிர்பார்ப்புக்கு நிவாரணம் கிட்டுமா? கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் (மீனாட்சி மகளிர் கல்லூரி அமைந்துள்ள பகுதி) மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடைபெற இருப்பதையொட்டி வடபழனி, கே.கே.நகர், போரூர் செல்லும் அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் யுனைடெட் இந்தியா காலனி, முதல் பிரதான சாலை வழியாக (மக்கள்குரல் அலுவலகம், மெட்வே ஹாஸ்பிடல்ஸ், ஓட்டல் சரவணாபவன் அமைந்துள்ள பகுதி) திருப்பி விடப்பட்டுள்ளன. குறைந்தது அடுத்த 2 ஆண்டு காலத்துக்கு இந்தப் போக்குவரத்து மாற்றமே தொடர வாய்ப்பு உள்ளது. […]

Loading

செய்திகள்

மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: 7 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு

டெல்லி, மே 27– பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக்கின் எட்டாவது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் 7 முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி, கேரளாவின் பினராயி விஜயன், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபின் பகவந்த் மான், தெலுங்கானாவின் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட் ஆகியோர் நிதி ஆயோக்கில் பங்கேற்காத 7 முதலமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்திய ஒன்றிய […]

Loading

செய்திகள்

ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உட்பட 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

டெல்லி, மே 27– ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உட்பட 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதியுடன் இயங்கி வருகிறது. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது 3 மருத்துவக் கல்லூரிகள் அதன் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 4 கல்லூரிக்கு நோட்டீஸ் இதன் மூலம் […]

Loading

செய்திகள்

2022–23 இல் டிக்கெட் இல்லா ரெயில் பயணம்: ரயில்வே நிர்வாகம் தகவல்

3.60 கோடி பேரிடம் ரூ.2,200 கோடி அபராதம் டெல்லி, மே 27– ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 3 கோடியே 60 லட்சம் பேரிடம் இருந்து ரூ.2,200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்பவர்களிடமிருந்து ரெயில்வே நிர்வாகம் அபராதம் வசூலித்து வருகிறது. பொதுவாக ரெயிலில் டிக்கெட் இன்றி பயணிப்பவர்கள் டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும். ஆனால் பயணி அதை செலுத்த மறுத்தாலோ, […]

Loading

செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் நியமனம்

குடியரசு தலைவர் நியமித்து உத்தரவு டெல்லி, மே 27– மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஆசியாவை தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைக்கும் ஸ்டாலின் பயணம்

நாடும் நடப்பும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணத்தை துவக்கி உள்ளார். சென்ற ஆண்டு துபாய் சென்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையும் முதலீடுகளுக்கு ஏற்ற களமாக இருக்கும் நிலையையும் விவரித்து பல்வேறு ஒப்பந்தங்களை தொழில்துறைகள், நிதி சேவை துறைகளிலும் ஏற்படுத்திய வெற்றியுடன் நாடு திரும்பினார். அந்த வரிசையில் இம்முறை பொருளாதார வெற்றிகளின் இலக்காக இருக்கும் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் ஒன்பது நாட்கள் பயணத்தை மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசு […]

Loading

செய்திகள்

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை, மே 25– தங்கத்தின் விலை அதிரடியாக இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து சவரன் ரூ.45,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை அண்மையில் குறைவதும் ஏறுவதுமாக நிலையில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசாக்கள் குறைந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி […]

Loading

செய்திகள்

குஜராத்தில் 10 ஆம் வகுப்பில் 64 சதவீத மாணவர்களே தேர்ச்சி

157 பள்ளியில் அனைவருமே பெயில் காந்திநகர், மே 25– குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் வெறும் 64.62% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு SSC என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 – 2023 கல்வியாண்டில் படித்த மாணவ மாணவிகளுக்காக 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி […]

Loading

செய்திகள்

கேரளாவில் லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி கைது: ரூ.1 கோடி, முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

திருவனந்தபுரம், மே 25– கேரளாவில் லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் பாலக்காயம் கிராம அதிகாரியான சுரேஷ் குமார், நேற்று முன்தினம் காலை 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சோதனை நடத்திய போது ரூ. 1 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் வங்கி வைப்பு […]

Loading

செய்திகள்

சென்னையில் 4 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூல்

சென்னை, மே.25- சென்னையில் 4 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அபராதத்தொகை அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் உடனடியாக செலுத்துவது இல்லை. இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை வசூலிப்பதற்காக சென்னையில் 10 இடங்களில் போலீஸ் அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) இயங்கி வருகிறது. அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு இந்த மையங்கள் […]

Loading