கொழும்பு, மே 27– இலங்கை அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கையினால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் என, தேசிய விவசாய ஒருங்கிணைப்பு தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேசிய விவசாய ஒருங்கிணைப்பு தலைவர் அனுராத தென்னகோன் கூறியதாவது:– “ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் தவறான விவசாய கொள்கையினால் தற்போது முழு விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. டாலர் நெருக்கடி காரணமாக உணவு பொருட்களின் இறக்குமதியும் எதிர்வரும் காலங்களில் மட்டுப்படுத்தப்படலாம். எதிர்வரும் காலங்களில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்பட […]