செய்திகள்

‘‘நீதித்துறைக்கு அழுத்தம் தர முயற்சிப்பவர்களை தடுக்க வேண்டும்’’

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம் புதுடெல்லி, மார்ச்.29- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம் எழுதி உள்ளனர். அதில், அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ‘அச்சுறுத்தலில் நீதித்துறை–அரசியல் மற்றும் தொழில் ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் 600 வக்கீல்கள் கடிதம் எழுதி உள்ளனர். அதில், மூத்த வக்கீல் […]

Loading

செய்திகள்

‘கேங்ஸ்ட முக்தர் அன்சாரி சிறையில் ‘திடீர்’ மாரடைப்பில் மரணம்

பாண்டா, மார்ச். 29– சங்கிலித் தொடராக 5 முறை எம்எல்ஏவாக இருந்த ‘கொலைக் குற்றவாளி’ முக்தார் அன்சாரி, சிறையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 60. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம், மாவ் மாவட்டத்தில் உள்ள பாண்டா நகரில் நடந்தது. ரம்ஜான் நோன்பை நிறுத்திய நிலையில் நேற்றிரவு 8.25 மணிக்கு முக்தார் அன்சாரிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு: 664 மனுக்கள் தள்ளுபடி

சென்னை, மார்ச் 29– தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில், 1,085 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27ம் தேதி மாலை 3 மணியுடன் முடிந்தது. 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூரில் 73, வடசென்னையில் 67, தென்சென்னையில் 64 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று காலை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஜனநாயகம் தலைநிமிர்ந்து பயணிக்க உங்கள் ஓட்டு யாருக்கு?

வை–மை வரும் நல்ல தலைமை – பாகம் 4: ஆர்.முத்துக்குமார் தமிழகத்தில் ஒரு வழியாக வேட்பு மனுதாக்கல் நிறைவு பெற்றுவிட்டது. களத்தில் இருப்பது யார்? என்பது அத்தொகுதி வாக்காளர்களுக்கு தெரிய வந்து இருக்கும். வேட்பு மனுதாக்கல் முடிந்துவிட்டாலும் இறுதி பட்டியல் மார்ச் 30 அன்று வெளியிடப்படும். தமிழகத்தில் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடக்கும். தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஐ.நா. சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் பிரான்சும் […]

Loading

செய்திகள்

100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்துக்கு ரூ.319 புதுடெல்லி, மார்ச் 28– மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் 100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் […]

Loading

செய்திகள்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் மனு தாக்கல்

நாகர்கோவில்,மார்ச்.28- கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் எம்.பி. அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று காலையில் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள தனது இல்லத்தில் தாயார் தமிழ்ச்செல்வி வசந்தகுமாரிடம் ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து தனது தந்தையும், கன்னியாகுமரி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான மறைந்த எச்.வசந்தகுமார் நினைவிடத்தில் […]

Loading

செய்திகள்

தேர்தல் கையேடு புத்தகம்: தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்

சென்னை, மார்ச்.28- சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொதுத்தேர்தல் – 2024 கையேட்டை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சாதாரண மக்களை மட்டுமல்லாமல், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்களின் வாகனங்களையும் பறக்கும் படையினர் சோதனையிடுகின்றனர். அதில் நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை. சோதனையின் போது அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களை யெல்லாம் நிறுத்தி சோதனை […]

Loading

செய்திகள்

நெல்லை தொகுதியில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் எம்.பி ராமசுப்பு

‘எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே மனு தாக்கல் செய்தேன்’ என பேட்டி நெல்லை, மார்ச்.28- நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளராக நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு இன்று மனுவை வாபஸ் பெற்றார். நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நேற்று வேட்புமனுவை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது […]

Loading

செய்திகள்

தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி, மார்ச்.28-– நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் பலரை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. ஆனால், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இத்தேர்தலில் போட்டியிடவில்லை. டெல்லியில் நேற்று நடந்த ஒரு ஆங்கில செய்தி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம் இதுபற்றி பார்வையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-– பா.ஜ.க. […]

Loading

செய்திகள்

தங்கம் விலை ரூ.50 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தை தொட்டது

சென்னை, மார்ச் 28– சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. சமீபகாலமாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று (மார்ச் 28) மேலும் அதிகரித்தது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250-க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு […]

Loading