செய்திகள்

விளம்பரம் செய்வதற்கு திமுகவுக்கு அனுமதி மறுத்த தேர்தல் ஆணையம்

உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

சென்னை, ஏப். 13–

திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது.

தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி கோரிய திமுகவின் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், “சாதாரண கருத்துக்களை கூறி விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. மேலும், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதற்கு 6 நாட்கள் வரை தாமதம் ஆகிறது.

திங்கள் கிழமை விசாரணை

விளம்பரத்துக்கு அனுமதி தராதது தேர்தல் ஆணையத்தின் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது. திமுகவின் மனு மீது 2 நாட்களில் பரிசீலித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். மேலும் திமுகவின் விண்ணப்பத்தை நிராகரித்த தமிழ்நாடு தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை நாளை மறுநாள் திங்கட் கிழமை (15 ந்தேதி) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *