செய்திகள்

மேட்டூர் அணையின் நீர் வரத்து 54 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர், பிப். 14–

மேட்டூர் அணையின் நீர் வரத்து 44 கன அடியிலிருந்து 54 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில், தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

54 கன அடியாக அதிகரிப்பு

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 44 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 43 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 65.85 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 29.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது.

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 91.42 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.80 டி.எம்.சி ஆகவும் உள்ளது. கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.58 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.46 டி.எம்.சி ஆகவும் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *