செய்திகள்

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர்: தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்வு

சென்னை, அக். 20–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவதற்கு இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் தொடர்வதே முதன்மைக் காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த வாரத்தில் இரண்டு நாட்களில் ரூ, 1,160 தங்கம் உயர்ந்திருந்தது.

ரூ.600 உயர்வு

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.5,660-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,500 ஆக இருக்கிறது.

‘இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்துள்ள சூழலில், சர்வதேச அளவில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றனர். இதனால், தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றும், போர் முடியும் வரை விலை ஏறுமுகத்தில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *