செய்திகள்

அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை, ஏப். 05–

கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த அமலாக்கத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓசன் லைப் ஸ்பேஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி இருந்தது. தமிழ்நாடு அரசின் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்திருந்தது.

அமலாக்கத்துறைக்கு தடை

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஓசன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மத்திய குற்றப்பிரிப்பு போலீசார் வழக்கை ரத்து செய்ய நிலையில், அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதி, சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் 4 வாரங்களில் ஒப்படைக்கவும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *