எதைத் தேர்ந்தெடுப்பது? – ராஜா செல்லமுத்து
சமீப காலமாக தான் சார்ந்து இருந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான் வேலன். இந்த வேலையை விட்டு விடுவதா? அல்லது தொடர்வதா ? என்ற போராட்டம் அவருக்குள் கடிகாரமுள்ள விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. தொழிலில் ஏற்பட்ட நட்டத்தைச் சொன்னால் புலம்பல் என்பார்கள். சொல்லாமல் இருந்தால் கௌரவம் என்பார்கள். தொழிலில் ஏற்படும் சிக்கல்களைச் சிலரிடம் சொல்லிப் பார்த்தான். அவர்கள் செவி மடித்து கேட்டு விட்டு வேலன் இல்லாத சமயம் அவனைக் கேலி செய்து சிரித்தார்கள். […]