உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
32 லட்சம் பேர் பலி
உலகம் முழுவதம் மது அருந்துவதால் மட்டும் 26 லட்சம் பேரும், போதை பொருட்களால் 6 லட்சம் மக்களும் இறக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். குறைந்த வருமானம் கிடைக்கும் நாடுகளில் அதிகமான மக்கள் மதுவினால் உயிரிழக்கின்றனர்.
அதிக வருமானம் கிடைக்கும் நாடுகளில் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது. 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.
சென்னை, மே 6– வடதமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ஆரெஞ்சு அலர்ட் விடுத்தும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான ஆரெஞ்சு அலர்ட்டை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– […]
பிரதமர் மோடி புகழாரம் சென்னை ஜன. 17– எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- இன்று எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவரது வாழ்க்கையை நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு பார்வை […]
டெல்லி, ஜன. 31– லட்சக்கணக்கான பக்தர்களை ஒழுங்குபடுத்தும் முறை குறித்து அறிந்து கொள்ள, அயோத்தி ராமன் கோயில் நிர்வாகிகள், திருப்பதி, சபரிமலை கோயில்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து அயோத்தி ராமரை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தினமும் வரும் லட்சக்கணக்கான பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் அயோத்தி அறக்கட்டளை அதிகாரிகள் திணறி வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்புவது குறித்து திருப்பதி, சபரிமலை மற்றும் மாதா வைஷ்ணவி தேவி கோவில் போன்ற […]