புதுடெல்லி, ஏப்.9–
தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமாருக்கு ‛ இசட் ‘பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஆக இருப்பவர் ராஜிவ்குமார். 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராஜிவ்குமார் செய்துள்ளார்.
இந்நிலையில், உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ராஜிவ்குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.