செய்திகள் நாடும் நடப்பும்

டெங்கு தடுப்பு தினம்


தலையங்கம்


இன்று (16–ந் தேதி) தேசிய டெங்கு தடுப்பு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே அனுசரிக்கப்படுகிறது.

டெங்கு வைரஸ், கொசுவினால் உண்டாகும் மிக பயங்கரமான நோய்களில் ஒன்று, ஒருவர் முறையான பராமரிப்பு எடுத்தால் தடுக்கப்படலாம். இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எளிய வழி உங்கள் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.

டெங்கு வைரஸ் கொசுக்களால் பரப்பப்படுகிறது, அதிகாலையில் அல்லது தாமதமான இரவில் கடிப்பதாகவும் ஒரு முறைக் கடிப்பதானால் தொற்று ஏற்படலாம்!

1779ன் ஆரம்பம் முதல் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவப் பதிவுகள் காட்டுகிகன்றன. எனினும் பரவலுக்கான விவரங்கள் மற்றும் நோய்களுக்கான காணரம் 20ஆம் நூற்றாண்டில் தான் வெளிச்சத்திற்கு வந்தன.

அது சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும். இவ்வாறு ஆரம்ப காலத்தில் கண்டறிவதற்காக டெங்குவின் அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். டெங்குவைக் குறிக்கக் கூடிய சில அறிகள் பற்றி நாம் பார்க்கலாம்.

டெங்குவினால் அவதிப்படக்கூடியவர்கள் வழக்கமாக பின்வரும் அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள்:

1. அதிக காய்ச்சல்

2. தலைவலி

3. வாந்தி

4. தசை மற்றும் மூட்டுவலி

5. தோல் தடிப்புகள்

இந்த அறிகுறிகள் டெங்குவை குறிக்கவும் செய்யலாம் அல்லது குறிக்காமலும் இருக்கலம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் உங்களை சோதித்துக்கொள்வது அறிவுறுத்தப்படுகிறது. எனினும் இவை நோயின் ஆரம்ப அறிகுறிகள் தான். சில நேரங்களில் மக்கள் அவற்றைப் புறக்கணிக்கக்கூடும், மற்றும் அது டெங்குவின் மிகத் தீவிர வடிவமாக உருவாகக்கூடிய அறிகுறிகளாவன:

1. இரத்தப் போக்கு

2. இரத்தவட்டுக்களின் எண்ணிக்கை குறைதல்

3. இரத்தப் பிளாஸ்மா கசிவது

4. குறைந்த இரத்த அழுத்தம்

டெங்கு ஒரு அபாயமான நோய் என்பதை ஒருவர் மனதில் கொள்ள வேண்டும் மற்றும் அவர்கள் ஆரம்ப அறிகுறிகளின் போதே மருத்துவ உதவியை உடனடியாக கோர வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது.

இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எளிய வழி உங்கள் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை உறுதி செய்வதாகும்.

1. உங்கள் வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

2 வீட்டில் அல்லது வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கிக் கிடக்க விடாதீர்கள்.

3 மழைக்காலங்ளில் தேங்கிக்கிடக்கும் நன்னீர் அளவு அதிகரிப்பன் காரணமாக டெங்குவினால் –கொசுவினால் உங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்; இந்த நிலையில் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் பயன்படுத்தப்பட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் கொசுவினால் பரவும் நோயாகும். அது பல்வேறு வகையான ஏடிஸ் கொசுவினால் பரவுகிறது. இரண்டாம் உலகப் போர் துவங்கியது முதலே டெங்கு காய்ச்சல் உலகளாவிய கவலைக்கு காரணமாக உள்ளது.

அதே போல, சிக்குன் குனியா என்பது சிக்குன் குனியா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றாகும். இந்த வைரஸ் ஒரே ஏடிஸ் வகைக் கொசுக்களின் இரண்டு இனங்களால் பரப்பப்படுகிறது. சிக்குன்குனியா வைரஸ் ஆர் டபிள்யூ ரோஸால் 1953ல் தனிமைப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் சிக்குன்குனியா ஒரு போதும் டெங்குவை காட்டிலும் கவலைக்கான பெரிய காரணமாக இருந்ததில்லை; எனினும், 2016ஆம் ஆண்டில் சிக்குன் குனியா நிகழ்வுகள் உச்சத்தை எட்டியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *