செய்திகள்

சென்னையில் போதை ஊசி போட்டுக் கொண்ட வாலிபர் உயி­ரி­ழப்பு

சென்னை, மே. 11–

சென்னை எம்­கேபி நகரில் கையில் போதை ஊசியை தனக்­குத்­தானே செலுத்­திய நபர் உயி­ரி­ழந்தார். அது தொடர்­பாக போதை மருந்­து­விற்­பனை செய்த கும்­பலை பிடித்து போலீசார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

சென்னை, எம்.கே.பி நகர், காந்திநகர் 6வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சத்யநாராயணன் (24). கஞ்சா ­போ­தைக்கு அடி­­மை­யா­ன இவர் வேலைக்கு செல்வதில்லை. இந்நி­லையில் நேற்­று ­ம­தியம் 2.30 மணியளவில், சென்னை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை சர்மா நகர் எஸ்டேட் உட்புறத்தில் உள்ள பகு­தியில் போதை மாத்திரையை ஊசியில் கலந்து இடது கையில் போட்டுள்ளார். இதனால் சிறிது நேரத்தில் சுய­நி­னை­வின்றி மயங்கி விழுந்­துள்ளார். இது தொடர்­பாக சத்­ய­நா­ரா­ய­ணனின் நண்பர் உசேன் பாஷா என்பவர் அவ­ரது வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சத்­ய­நா­ரா­ய­ணனின் அண்ணன் பிரசாந்த் வந்து பார்த்த போது சத்யநாரா­யணன் இறந்து விட்­டது தெரி­ய­வந்­தது. இது தொடர்­பாக போலீ­சுக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டது. எம்­கேபி நகர் போலீசார் அங்கு விரைந்து வந்­த­னர். சத்ய­நா­ரா­யணனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி­சோ­த­­னைக்­காக அனுப்பி வைத்­தனர்.

இந்­தச் சம்­பவம் தொடர்­பாக எம்­கேபி நகர் போலீசார் வழக்­குப்­ப­திவு செய்து சத்­ய­நா­ரா­ய­ண­னுக்கு போதை மருந்து விற்ற நபர்கள் குறித்து விசா­ரணை நடத்­தினர். அதனைத் தொடர்ந்து கொடுங்­கையூரைச் சேர்ந்த முக­மது மஜீத் (22), வியா­சர்­பாடி அசேன் பாஷா (24) மற்றும் 17 வயது சிறுவன் உள்­ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்­தனர்.

அவர்­க­ளிடம் நடத்­திய விசா­ர­ணையில், கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் பின்புறம் உள்ள பகுதியில் அண்டா என்ற ராஜேந்திரன் என்பவரிடமிருந்து முகமது மஜீத் 200 ரூபாய்க்கு போதை மாத்திரை வாங்கி கொடுங்கையூர், எம்.கே.பி நகர் பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு 250 ரூபாய்க்கு விற்றுள்ளார். சக்திவேல் என்பவன் மஜீத் என்பவனிடம் வாங்கி 300 ரூபாய்க்கு அந்த பகு­தியில் போதை மாத்­தி­ரை­களை விற்று வந்­தது தெரி­ய­வந்­தது. அவர்­களிடம் போலீசார் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *