சென்னை, டிச.6–
சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ள பங்குகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக அதிகளவிலான டீசல்களை மக்கள் வாங்கிச் செல்வதால் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் பழுதாகி ஆங்காங்கே நிற்கும் கார்களுக்கு பெட்ரோலை கேன்களில் வாகன ஓட்டிகள் வாங்கிச் செல்வதால் பெட்ரோலின் இருப்பும் குறைந்து வருகின்றது. அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் நீண்ட வரிசையில் பெட்ரோல் போடுவதற்காக வாகனங்கள் நின்றன. நீண்ட நேரம் நின்றும் இறுதியில் பெட்ரோல் முடிவடைந்ததால், ஏமாற்றங்களுடன் வண்டிகளை தள்ளிக்கொண்டு சென்றார்கள்.