ஒகேனக்கல், மே 23–
காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுளுவில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தமிழக எல்லை பகுதியான பிழிகுண்டுளுவில் நீர்வரத்து படிப்படியாக அடியாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்த மழையால் நேற்று வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர் வந்து கொண்டு இருக்கிறது.
மேலும் ஒகேனக்கல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.
#kaveri #rainfall #Tamilnadu