செய்திகள்

அரசுப் பேருந்து – ஆம்னிப் பேருந்து நேருக்கு நேர் மோதல்: 24 பேர் காயம்

கடலூர், மே 12–

கடலூர் அருகே அரசு பேருந்தும் ஆம்னிப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 24 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று காரைக்கால் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலையில் கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. அப்போது பின்னால் வந்த ஆம்னி பேருந்து, அரசு பேருந்து மீது மோதியது. இந்த ஆம்னி பஸ் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பலர் காயமடைந்தனர்.

24 பயணிகள் படுகாயம்

இந்நிலையில் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 24 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *