செய்திகள்

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திருச்சி கலெக்டர், எஸ்.பி. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்று சோதனை சென்னை, ஜூன் 22– தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் விசாரணையை துவக்கினார் கள்ளக்குறிச்சி, ஜூன் 21– கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் கள்ளக்குறிச்சியில் தனது விசாரணையை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முழு விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் கமிஷன் அமைப்பு

விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் : ஸ்டாலின் உத்தரவு கலெக்டர் மாற்றம்; 4 பேர் கைது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் சென்னை, ஜூன் 20– கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விஷ சாராய சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திடவும் முதல்வர் […]

Loading