திருச்சி கலெக்டர், எஸ்.பி. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் சென்று சோதனை சென்னை, ஜூன் 22– தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கால சமுதாயத்தை பாதிக்கும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முழு […]