ஏலக்காய் விலையும் உயர்ந்தது சென்னை, மே.12- பூண்டு விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட சமையலில் பூண்டுக்கு பிரதான இடம் உண்டு. வாயு தொல்லைக்கு தீர்வு, கொழுப்பை கரைத்தல் போன்ற மருத்துவ குணங்களும் பூண்டில் நிறைந்திருப்பதால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பூண்டின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து வெகுவாக குறைந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிலோ பூண்டு ரூ.500 கடந்து அதிர்ச்சி அளித்தது. ஏறுமுகத்தில் […]