புதுடெல்லி, ஜூலை 4– ‘நீட்’ தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் அமன் சிங் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. குஜராத், பிகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் […]