ராமேஸ்வரம், ஜூலை 2– இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 25 பாம்பன் மீனவர்களை விடுவிக்கக்கோரி, மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் நம்புதாளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 நாட்டு படகுகளையும் அவற்றிலிருந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை நேற்று அதிகாலையில் கைது செய்தது. கைதான மீனவர்கள் இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காலவரையற்ற போராட்டம் இதையடுத்து நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட […]