செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்: தி.மு.க. அரசை கண்டித்து 22–ந் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை அறிவிப்பு சென்னை, ஜூன் 20– கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து 22–ந் தேதி தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல்: அறிக்கை கேட்கிறது கட்சி மேலிடம்

தமிழிசையிடம் அமித்ஷா கண்டிப்பு ஐதராபாத், ஜூன் 12– தமிழக பாஜகவில் அண்ணாமலை தரப்பு, தமிழிசை தரப்பு என இரு அணிகளுக்குள் உள்கட்சிப் பூசல் ஏற்பட்டிருப்பதாகவும் இது குறித்து ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா மேடையிலேயே தமிழிசையை அமித்ஷா கண்டித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் வெங்கைய நாயுடு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் […]

Loading

செய்திகள்

எல்.கே.அத்வானியை சந்தித்து மோடி ஆசி பெற்றார்

புதுடெல்லி, ஜூன்.8- 3-வது முறையாக பதவி ஏற்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை நேற்று நேரில் சந்தித்து ஆசி பெற்றார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதனையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் நேற்று பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அத்வானிக்கு பூங்கொத்து கொடுத்து மோடி […]

Loading

செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை

ஜெயக்குமார் திட்டவட்டம் சென்னை, ஜூன்.8-– அண்ணா தி.மு.க –பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பு கிடையாது. வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும். தேர்தல் என்றால் வெற்றி, தோல்வி சகஜம். தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. 305 இடங்களில் வெற்றி பெறும்: அமெரிக்க அரசியல் ஆலோசகர் பேட்டி

மும்பை, மே 23– இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 305 இடங்களில் வெற்றி பெறும் என்று அமெரிக்காவை சேர்ந்த அரசியல் ஆலோசகரும், ‘ரிஸ்க் மற்றும் ரிசர்ச் கன்சல்டிங்’ நிறுவனமான யூரேசியா குழுமத்தின் நிறுவனரான இயான் ஆர்தர் பிரம்மர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலை நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் […]

Loading

செய்திகள்

மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் பிரதமர் பா.ஜ.க.வின் பிளவுவாத கனவுகள் பலிக்காது

ஸ்டாலின் எச்சரிக்கை சென்னை, மே 18– “பாஜக.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை – பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் […]

Loading