செய்திகள்

17-ந்தேதி பக்ரீத் பண்டிகை

சென்னை, ஜூன்.8- துல்ஹஜ் மாதம் கொண்டாடப்படும் பண்டிகை ‘ஈதுல் அல்ஹா’ எனப்படும். இது ‘ஹஜ்’ கடமையின் நிறைவையொட்டி கொண்டாடப்படுவதால் ‘ஹஜ் பெருநாள்’ என்றும், ‘தியாகத் திருநாள் ‘என்றும் அழைக்கப்படுகிறது. இதற்குப் ‘பக்ரீத் பண்டிகை’ என்ற பெயரும் உண்டு. துல்ஹஜ் பிறை நேற்று தென்பட்டது. இதனால் வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) பக்ரீத்பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடுஅரசின் தலைமை காஜி முகமது சலாகுதீன் அய்யூப் அறிவித்துள்ளார்.

Loading