சிறுகதை

தெய்வச் செயல் – ராஜா செல்லமுத்து

வாராவாரம் வியாழக்கிழமை மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் குமாரும் தினேஷும். எந்த வேலை இருக்கிறதோ இல்லையோ வியாழக்கிழமை என்று வந்துவிட்டால் காலையில் விரதம் இருந்து சாய்பாபா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் இருவரும். அத்தனை பக்தி. வழக்கம் போல அந்த வாரமும் தி.நகரிலிருந்து மயிலாப்பூருக்கு செல்வதற்கு ஷேர் ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோ வருவதற்கு கொஞ்சம் தாமதமானது .அவர்கள் நின்று கொண்டிருந்த சாலையின் இடது புறம் […]

Loading