சென்னை, ஜூன் 15– டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை அவரது இல்லத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும், முன்னாள் தலைவர் தமிழிசைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதற்கிடையே ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விரலை காட்டி கோபமான முகத்துடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. […]