செய்திகள்

மோட்டார் சைக்கிளில் ஊரைச் சுற்றிய தோனி

ராஞ்சி, மே 21– ராஞ்சியில் எம்.எஸ். தோனி மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பெங்களூருவில் மே 18 ந்தேதி அன்று நடைபெற்ற கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே – பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை […]

Loading

செய்திகள்

4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை

காரமடை, மே 20– சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், தனது சொந்த ஊரான காரமடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அருகே திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (வயது 37). பெங்களூருவை சேர்ந்தவர். இவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (33). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண்குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் […]

Loading

செய்திகள்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு

சென்னை, மே.20- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தெலுங்கானாவை சேர்ந்த தம்பதிகளிடமிருந்து கடத்தப்பட்ட 3 வயது குழந்தை 5 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டம், நர்மெட்டா மண்டலம், தரிகோப்புலா பகுதியை சேர்ந்த 15 பேர் கொண்ட குழு நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்ததும் இந்த குழுவினர் நேற்று காலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். இந்த குழுவினர் நேற்று மாலை 6.35 […]

Loading

செய்திகள்

சென்னை பாலிகிளினிக்குகளில் மனநல மருத்துவ சிகிச்சை பெறலாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, மே 18– சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் பாலிகிளினிக்குகளில் இன்று 19 இடங்களில் வழங்கப்படும் மனநல மருத்துவ சிகிச்சையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நலவாழ்வு மையங்கள், 15 சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவம் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் நலம், குழந்தைகள் நலம் உள்ளிட்ட புறநோயாளிகளுக்கான சேவைகள் […]

Loading

செய்திகள்

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு

மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது சென்னை, மே 18– சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,800-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55,120 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர் ரூ.55,000ஐ ஒட்டி ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 10–ந்தேதி […]

Loading

செய்திகள்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவு

சென்னை, மே 17– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்றும் முன்தினமும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறிய நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.200 குறைவு அதன்படி சென்னையில், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ. 6,770 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.200 […]

Loading

செய்திகள்

சென்னை மக்களை குளிர்வித்த கோடை மழை

சென்னை, மே 16– சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவும் ஆங்காங்கே கோடை மழை பெய்து, வெப்பத்தால் வாடிய சென்னை மக்களை குளிர்வித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலுக்கிடையில், மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்கிறது. அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் இன்று காலை 8 […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து கோவை சென்ற ஆம்னி பஸ்சில் இளம்பெண் இறந்த நிலையில் மீட்பு

கோவை, மே 16– சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் கோவை சென்ற இளம்பெண் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். கோவை அருகே உள்ள பாலத்துறையை சேர்ந்தவர் கார்மேகம். இவருடைய மகள் மகாலட்சுமி (வயது 23). என்ஜினீயரிங் படித்த இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாலட்சுமிக்கு உடல்நலக்குறைவு […]

Loading

செய்திகள்

தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி கைது

சென்னை, மே.16-– தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்ட சென்னையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ஆதரவாக சிலர் இந்தியாவில் செயல்படுவதாகவும், குறிப்பாக தென் மாநிலங்களில் அவர்கள் ஊடுருவி இருப்பதாகவும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தென் மாநிலங்களை குறிப்பாக தமிழகத்தை என்.ஐ.ஏ. போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த கண்காணிப்பு வலை யில் […]

Loading

செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு: சென்னை மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

சென்னை, மே 15– சென்னை மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் விமான நிலையம் செல்ல ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பச்சை வழித்தடத்தில் மாறி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விம்கோ நகர் – […]

Loading