பெங்களூரு, ஜூன்21- கர்நாடகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடம் பேச வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். தாராள மனப்பான்மை கர்நாடகம் என்று பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி கன்னடத்தாய் புவனேஸ்வரி தேவிக்கு 25 அடி உயர வெண்கல சிலை பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா சிலை நிறுவுவதற்கான அடிக்கல்லை நாட்டி பேசியதாவது:- கர்நாடகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடம் பேச வேண்டும். கன்னடத்தில் […]