புதுடெல்லி, ஜூன்.8-
3-வது முறையாக பதவி ஏற்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை நேற்று நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
இதனையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் நேற்று பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அத்வானிக்கு பூங்கொத்து கொடுத்து மோடி ஆசி பெற்றார்.
அதனைத்தொடர்ந்து பா.ஜ.க. மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரையும் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.