டெல்லி, ஜூன் 1–
இமயமலைக்கு ஒருவார கால ஆன்மிக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை சென்றுள்ளார். கடந்த 29-ம் தேதி அவர் தனது நண்பர்கள் ஸ்ரீஹரி உள்ளிட்டோருடன் இமயமலைக்கு சென்றார். இந்நிலையில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று பத்ரிநாத் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.
3 நாளில் திரும்புவார்
இந்நிலையில், பத்ரிநாத் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டபோது, விமான நிலையத்தில் மோடி வெற்றி பெறுவாரா என்று கேட்டபோது, அரசியல் பேச வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் நாளான ஜுன் 4-ம் தேதியோ அதற்கு முதல் நாளோ ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.