சென்னை, ஜூன் 20– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-–26–ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், திருச்சி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் […]
![]()











