அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்தார், ஞானையா .வெயிலுக்கு முன்னால் சென்று விட்டால் வேலையை அழகாக முடித்து விடலாம் என்று எண்ணியவர், அன்று இரவே அத்தனையும் முடிவு செய்து அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி அருகில் இருந்த பஸ் நிலையத்திற்கு வந்தார். ஓடிக் களைத்த பேருந்துகள் எல்லாம் ஓரிடத்தில் அமைதியாக நின்றிருந்தன.. சில பேருந்துகள் தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு சுத்தமாக இருந்தன. சில பேருந்துகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். புறப்பட தயாராக […]